sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்

/

சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்

சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்

சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்


ADDED : ஆக 08, 2024 12:28 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : திண்டிவனம் அடுத்த எண்டியூரில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக அய்யனாரப்பன் கோவில் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றம் செய்து, கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.238 கோடி நிதி ஒதிக்கீடு செய்தது.

அதற்கான பணிகள் நடந்து வருகின்றது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலை பணிகளை முடிக்கவேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவால் சாலை பணிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக எண்டியூரில் சாலை ஓரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, அய்யனாரப்பன் கோவில் மற்றும் சிமென்டால் கட்டப்பட்ட அயனாரப்பன், குதிரை சிலைகளை அகற்ற நெடுஞ்சாலைதுறையினர் நிர்வாகிகளிடம் கூறியிருந்தனர்.

ஆனால் கோவில் நிர்வாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலை நிர்வாகிகள் வேறு இடம் இல்லாததால் அப்புறப்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்துறை, காவல்துறையினர் முன்னிலையில் எம்.ஜி.ஆர்., சிலை, அய்யனாரப்பன் கோவில் சிலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அகற்றினர்.






      Dinamalar
      Follow us