ADDED : மே 01, 2024 01:59 AM

வானுார், : வானுார் அடுத்த பெரும்பாக்கம் சந்திப்பில், அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ் சார்பில் நடந்த விழாவிற்கு, எம்.எல்.ஏ., சக்கரபாணி தலைமை தாங்கி, திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில்,ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேந்தன், இளைஞரணி துணைச் செயலாளர் சங்கர், பிரகாஷ், இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாபதி, காமராஜ்.
ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட எம்.ஜிஆர்., மன்ற துணைச் செயலாளர் வேல்முருகன், அணி செயலாளர்கள் வீரப்பன், அய்யனார், மகளிர் அணி செயலாளர் மாலா, வழக்கறிஞர் பிரிவு தொகுதி செயலாளர் தியாகராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் ஜெய்பீம், கிளை செயலாளர் ரவி, கார்த்திக் பங்கேற்றனர்.