ADDED : ஜூலை 30, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கள்ளுக்கடை சந்திப்பு பகுதியில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
விழாற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணை சேர்மன் ஜோதி வரவேற்றனர்.
அமைச்சர் பொன்முடி 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

