/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கோட்டத்தில் 3,275 அரசு பஸ்கள் ஆய்வு
/
விழுப்புரம் கோட்டத்தில் 3,275 அரசு பஸ்கள் ஆய்வு
ADDED : ஏப் 28, 2024 05:38 AM
விழுப்புரம் : தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 3,275 பஸ்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியது.
திருச்சியில், சில தினங்களுக்கு முன், அரசு டவுன் பஸ்சில் சீட் கழன்றதில் கண்டக்டர் வெளியே விழுந்த காயமடைந்தார். இதையடுத்து, அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால், விபத்து நிகழ்ந்ததாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உட்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அரசு பஸ்களின் நிலை குறித்து உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க போக்குவரத்துத்துறை செயலருக்கு, தலைமைச் செயலர் உத்தரவிட்டார். 2 தினங்களில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், விழுப்புரம் கோட்டம் சார்பில் விழுப்புரம் மண்டலத்தில் 735, கடலுார் மண்டலத்தில் 592, திருவண்ணாமலை மண்டலத்தில் 613, வேலுார் மண்டலத்தில் 657, காஞ்சிபுரம் மண்டலத்தில் 429, திருவள்ளூர் மண்டலத்தில் 249 உட்பட மொத்தம் 3,275 அரசு பஸ்கள் அனைத்தும் ஆய்வு மேற்கொள்ளும் பணி துவங்கியது.
ஒரு கிளையில் இயங்கும் பஸ்களை மற்றொரு கிளையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
வரும் மே 2ம் தேதிக்குள் முழுமையான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

