sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

/

அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு


ADDED : ஜூன் 28, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : வானூர் அரசு விதைப் பண்ணையில் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு நடப்பாண்டிற்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய உயிரி பூச்சிவிரட்டி பண்புடைய தாவரங்களான ஆடாதொடா, நொச்சி போன்ற நடவு கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வானூர், காகுப்பம் மற்றும் இருவேல்பட்டு ஆகிய விதைப்பண்ணைகளில் மொத்தம் 1,36,500 நடவு கன்றுகள் வேளாண்மைத் துறை மூலம் உற்பத்தி செய்து, இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளது.

வானூர் அரசு விதைப்பண்ணையில் உள்ள ஆடா தொடா, நொச்சி நடவுக் கன்றுகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வானூர் அரசு விதைப்பண்ணை வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலர் யமுனா ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us