/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளிக்கு மிரட்டல்; போதை ஆசாமி கைது
/
தொழிலாளிக்கு மிரட்டல்; போதை ஆசாமி கைது
ADDED : ஜூலை 22, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஆலயாம்பாளையம் ரயில்வே கேட் அருகே நின்றிருந்த போது, குடிபோதையில் வந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தவமணி, 47; குடிபோதையில், குமரனிடம் தகராறு செய்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் தவமணி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.