ADDED : பிப் 26, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நகராட்சி திடலில் ஆர்ப்பாட் டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தண்டபாணி, அறிவழகன், சிவக்குமார், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடந்த 2003ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்படபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

