/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா
/
முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா
ADDED : ஜூன் 24, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : ஆண்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9:00 மணிக்கு முத்துமாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.