/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 12, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் அரிகரன் 500க்கு 477, சுபாஷ் 333, முகமது இம்ரான் 288 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், பெற்றோரை நிர்வாகிகள் செந்தில், சுந்தர் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.