/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா
/
அவலுார்பேட்டையில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 09, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையைத் தொடர்ந்து 8:30, மணிக்கு கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலையில் சுவாமி திருக்கல்யாணமும், தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.