/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வழக்கறிஞர் சாவு
/
ஸ்கூட்டரில் இருந்து விழுந்த வழக்கறிஞர் சாவு
ADDED : ஜூலை 25, 2024 11:14 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஸ்கூட்டரில் சென்ற போது, கீழே விழுந்து காயமடைந்த, வழக்கறிஞர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த சலவாதி, பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் மகன் சிங்காரவேலன், 30; வழக்கறிஞர். இவர் கடந்த 9ம் தேதி மதியம் 12:30 மணியளவில், ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வடஆலப்பாக்கம் ரோடு வழியாக சென்றார்.
அப்போது அங்குள்ள வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் காயமடைந்த அவர், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் பிற்பகல் சிங்காரவேலன் இறந்தார்.
புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.