ADDED : ஜூலை 12, 2024 05:09 PM

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா பிரம்மதேசத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் விஜி, 35; சாராய வியாபாரி. கடந்த ஜூன் 1ம் தேதி, பிரம்மதேசம் அடுத்த ஏந்தூர் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்டபோது, பிரம்மதேசம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடை த்தனர்.
தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி, அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பிரம்மதே சம் போலீசார், விஜியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.