/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் ரூ.25.99 கோடி கடனுதவி வழங்கல்
/
விழுப்புரத்தில் ரூ.25.99 கோடி கடனுதவி வழங்கல்
ADDED : மார் 09, 2025 05:03 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த மகளிர் தின விழாவில், 25.99 கோடி ரூபாய் மதிப்பில், 334 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், மகளிர் தின விழா நடந்தது, நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, சிவக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் பத்மஜா முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற விழுப்புரம் அரசு பள்ளி மாணவி சுபஸ்ரீயை பாராட்டி, அமைச்சர் பொன்முடி நினைவுப் பரிசு வழங்கினார்.
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 25.99 கோடி ரூபாய் மதிப்பில், 334 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், 11 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மணிமேகலை விருது மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீதா அரசி, மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி சேரன், மகளிர் திட்ட இயக்குனர் சுதா, கல்லுாரி முதல்வர் கிருஷ்ண லீலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், உதவி திட்ட அலுவலர்கள் கமலவள்ளி, அருண்குமார், வீரசேகரன், மனுநீதி சோழன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை மேலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.