sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனத்தில் லோக் அதாலத் 800 வழக்குகளுக்கு தீர்வு

/

திண்டிவனத்தில் லோக் அதாலத் 800 வழக்குகளுக்கு தீர்வு

திண்டிவனத்தில் லோக் அதாலத் 800 வழக்குகளுக்கு தீர்வு

திண்டிவனத்தில் லோக் அதாலத் 800 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : ஜூன் 09, 2024 04:44 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த லோக் அதலாத்தில், 1 கோடியே 79 லட்சம் மதிப்பில் 800 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று காலை லோக் அதாலத் நடந்தது. முதன்மை சார்பு நீதிபதி், வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் செல்வி தனம் வரவேற்றார். கூடுதல் மாவட்ட நீதிபதி (1) மொகமத் பாரூக் தலைமை தாங்கி பேசினார்.

திண்டிவனம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சண்முகம், அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் பூபாலன், வழக்கறிஞர் நலச்சங்க செயலாளர் கிருபாகரன், மகளிர் வழக்கறிஞர் தலைவர் கலா, மாஜிஸ்திரேட்டுகள் கமலா, மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் பாதுக்காக்கும் பொருட்டு பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று வழங்கபட்டது.

நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் கோதண்டம், அருணகிரி, நாகையா, பாலச்சந்திரன், பாலசுப்ரமணி, அஜ்மல் அலி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

லோக் அதாலத்தில் சிவில் , கிரிமினல் , மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது, ஒரு கோடியே 79 லட்சத்து 71 ஆயிரத்து 616 மதிப்பில் 800 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, முடித்து வைக்கப்பட்டது.

முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 674 வழக்குகளில் 2.47 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சையத் பர்ஹத்துல்லா, தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம், முதன்மை சார்பு நீதிபதி மைதிலி, கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது அலி, முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹரிஹரசுதன், இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ரீனா முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் சங்கத் தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல், பொருளாளர் இளையராஜா, மற்றும் ராமலிங்கம், அருண்பிரசாத் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், வேல்முருகன் உள்ளிட்ட மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 674 வழக்குகளுக்கு 2 கோடியே 47 லட்சத்து 23 ஆயிரத்து 118 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us