ADDED : ஜூன் 15, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒரு நெம்பர் லாட்டரி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நெம்பர் லாட்டரி விற்பனை பல இடங்களில் தொடர்ந்து நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று காலை 11:00 மணிளவில் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கே திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த முரளிதரன், 32; என்பவர் ஒரு நெம்பர் லாட்டரி விற்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்தனர்.