ADDED : மே 05, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், மே 5-
வளவனுார் அருகே லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், சுந்தரிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சுந்தரிபாளையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,62; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.