sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது

/

மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது

மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது

மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 30, 2024 06:35 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : மாற்றுத் திறனாளி வாலிபரைத் தாக்கிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த முட்டியூர் குளத்து மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 29; மாற்றுத் திறனாளி. இவரது மூன்று சக்கர பைக் பழுதடைந்ததால், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள டூ வீலர் மெக்கானிக்கான மாணிக்கம், 26; என்பவரிடம் பைக்கை சீர் செய்ய கொடுத்துள்ளார்.

பைக் சீர் செய்த பின் பாஸ்கர், மெக்கானிக் கேட்ட 2,300 ரூபாயை கொடுத்துள்ளார். பின், பைக்கை ஸ்டார்ட் செய்து சிறிது துாரம் சென்ற போது, மீண்டும் பழுதாகியது. இதுபற்றி மெக்கானிக்கிடம் கேட்ட போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம், அருகில் கிடந்த கத்தியை எடுத்து பாஸ்கர் தலையில் வெட்டினார். இதை பார்த்து தடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையும் வெட்டினார். காயமடைந்த இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us