/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது
/
மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது
ADDED : செப் 09, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் மயிலம் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபதி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 34 பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த மெய்யமுத்து மகன் விஜய், 35; என தெரியவந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கார் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.