/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரும்பு பொருட்கள் திருடிய நபர் கைது
/
இரும்பு பொருட்கள் திருடிய நபர் கைது
ADDED : ஜூன் 12, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : ரோஷனை அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,44; இவர், வீட்டு பின்புறத்தில் நேற்று முன்தினம் இருந்த டிராக்டர் ஜாக்கி, இரும்பு ராடு, கடப்பாறை, ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்,50; என்பவர் திருடி கொண்டிருந்தார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
இதை கண்ட, ரமேஷ் மற்றும் அங்குள்ள சிலர், சக்திவேலை பிடித்து, ரோஷனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.