sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்

/

அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்

அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்

அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்


ADDED : மார் 07, 2025 05:26 AM

Google News

ADDED : மார் 07, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பக்கமேடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் நடந்தது.

வளனுார் அடுத்த பக்கமேடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மாசி மாத மயான கொள்ளை உற்சவம், தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம், கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம், 1ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. கோவில் குளக்கரையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் உற்சவர், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின், தேரில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில், மாங்கல்யம், புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகளை, பக்தர்கள் அங்காளம்மனுக்கு காணிக்கையாக அளித்து, சிறப்பு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்காளம்மன், காளி, பாவாடைராயன் போன்ற சுவாமி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள், பக்தர்களும் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.






      Dinamalar
      Follow us