sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்


ADDED : ஜூன் 05, 2024 10:58 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய், கால் மற்றும் வாய் நோய் 5வது சுற்று தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் பழனி தெரிவித்தார்.

விழுப்புரம் கோட்டத்தில் 2,35,000 கால்நடைகள், திண்டிவனம் கோட்டத்தில் 2,43,500 கால்நடைகள் உட்பட மொத்தம் 4,78,500 கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளில் வரும் 10ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி ரை 30 நாட்களில் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள 97 தடுப்பூசி போடும் குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, கட்டாயம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இந்த தடுப்பூசியை சினையுள்ள கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களில் போடுவது அவசியமாகும். இதனால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. நுாறு சதவீதம் இலக்கை அடைய கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தங்களின் கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்து பயனடைய வேண்டும் என, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us