ADDED : பிப் 27, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை,; மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட செக்கடிகுப்பம் கிராமத்தில் கால்நடை மருத்துவம் , இனப்பெருக்க மேம்பாட்டு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சரவணன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முகாமை துவக்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கினார்.
இதில் கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், சினைப்பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகளை மேல்மலையனுார் கால்நடை மருந்தக டாக்டர்கள், பணியாளர்கள் மேற்கொண்டனர்.