sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிதி ஒதுக்க முடியாது என மிரட்டும் அமைச்சர்கள்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

/

நிதி ஒதுக்க முடியாது என மிரட்டும் அமைச்சர்கள்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

நிதி ஒதுக்க முடியாது என மிரட்டும் அமைச்சர்கள்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

நிதி ஒதுக்க முடியாது என மிரட்டும் அமைச்சர்கள்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

1


ADDED : ஜூலை 04, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:44 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : 'முதல்வர் பிரசாரம் செய்தாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., தோற்பது உறுதி' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று தைலாபுரத்தில் அவர் கூறியதாவது:

தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதால், இடைத்தேர்தலில் தோல்வி ஏற்படும் என தி.மு.க., அஞ்சுகிறது.

அதனால்தான் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது. அன்புமணி பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக, தி.மு.க., அலுவலகத்தில் அடைத்து வைக்கின்றனர். பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் நுாறு நாள் வேலை திட்ட பணிகள் வழங்க மாட்டோம். ஊராட்சிக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என அமைச்சர்கள் மிரட்டுகின்றனர்.

இத்தனை அத்துமீறல்களையும் தாண்டி பா.ம.க., 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

அ.தி.மு.க., - பா.ம.க.,விற்கு பொது எதிரி தி.மு.க.,தான். எனவே, அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை வீணாக்காமல் இடைத் தேர்தலில் பா.ம.க.,விற்கு ஆதரவு தர வேண்டும்.

தமிழகத்தில் சமூக நீதியை காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இல்லையெனில் பதவி விலக வேண்டும்.

ஜாதி வாரி இடஒதுக்கீட்டால் பலர் டாக்டர், பட்டப்படிப்பு படித்துள்ளது தி.மு.க., உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் போட்ட பிச்சை என்றும், அதனால்தான் இன்று நாய் கூட பி.ஏ., பட்டம் பெறுகிறது என தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி கூறியது கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் முதல்வரே பிரசாரம் செய்தாலும் தி.மு.க., தோற்பது உறுதி

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us