/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 30, 2024 06:17 AM
செஞ்சி: செஞ்சி வழுக்காம்பாறை முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி புதிய விக்கிரகங்கள் கரிக்கோல ஊர்வலமும், அன்று இரவு 9:00 மணிக்கு முத்துமாரியம்மன், விநாயகர், முருகர், நவக்கிரகம் உள்ளிட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தன மருந்து சாற்றி, கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசமும், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கலச ஸ்தாபிதம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. 9:30 மணிக்கு நாடி சந்தானம், 9:45 மணிக்கு மகா பூர்ணாகுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு செல்லபிராட்டி ஈஸ்வரன் குருகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

