/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியவரை தாக்கிய வாலிபருக்கு வலை
/
முதியவரை தாக்கிய வாலிபருக்கு வலை
ADDED : செப் 08, 2024 06:24 AM
விழுப்புரம்: காணை அருகே முதியவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை அடுத்த காங்கேயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன், 60; இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது.
அந்த நிலத்திற்கு அருகே உள்ள நிலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 5ம் தேதி கட்டியிருந்த அவரது பசுமாட்டைக் காணவில்லை.
இதனால், பலராமன் தான் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து விட்டிருப்பார் என அவரை லட்சுமி திட்டினார்.
இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த லட்சுமியின் மகன் அருண்குமார், 21; என்பவர், பலராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீசார் அருண்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.