/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அசைவம் வேண்டாம் சைவமே போதும்...
/
அசைவம் வேண்டாம் சைவமே போதும்...
ADDED : மார் 28, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரத்தில் நேற்று காலை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் மதியம் 1.30 மணிக்கு கலைஞர் அறிவாலயம் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு மதியம் அசைவ சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தனது மாவட்ட செயலாளரிடம், 'எனக்கு அசைவ சாப்பாடு வேண்டாம். சைவ சாப்பாடே போதும்' என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வி.சி., மாவட்ட செயலாளர் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சாம்பார், ரசம், மோர், கீரை உள்ளிட் சைவ சாப்பாட்டை சாப்பிட்டவர் மீண்டும் பிரசாரத்தை துவக்கினார்.

