ADDED : செப் 08, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணி திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி ஜெயா, 62; நேற்று முன்தினம் இரவு 7:45 மணியளவில் திருச்சி - சென்னை சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னைச் சென்ற ராயல் என் பீல்டு பைக், ஜெயா மீது மோதியது. படுகாயமடைந்த ஜெயா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.