ADDED : ஜூன் 12, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் விஜியா, 70; இவர், கடந்த 9ம் தேதி இரவு 8:30 மணியளவில் திருக்கோவிலுார் - திருவெண்ணெய்நல்லுார் சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த பைக் விஜியா மீது மோதியது. அதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.