sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சியில் கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி

/

செஞ்சியில் கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி

செஞ்சியில் கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி

செஞ்சியில் கருணாநிதி நினைவு நாள் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி


ADDED : ஆக 08, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சியில் தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சியிலும், ஒன்றிய தி.மு.க., சார்பில் அப்பம்பட்டிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து காந்தி பஜார் வழியாக மவுன ஊர்வலம் சென்று கூட்ரோட்டில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் தலைமையில் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

நகர செயலாளர் கார்த்தி முன்னிலை, வகித்தார். இதே போல் அப்பம்பட்டு பஸ் நிறுத்தத்திலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை சேர்மன் ஜெயபாலன், பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், கவுன்சிலர்கள் சங்கர், ஜான்பாஷா, சீனுவாசன், சிவக்குமார், மோகன், ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், தாட்சாயணி, தொண்டரணி பாஷா, இளைஞரணி பழனி, செந்தில், கோட்டீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி சர்தார், அய்யாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us