ADDED : மே 22, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுாரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த வளவனுார் ரயில் நிலையத்தில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நேற்று முன்தினம் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார், விசாரணை நடத்தினர்.
அதில், நேற்று முன்தினம் காலை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.
உடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், என்பது குறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

