sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் மேலும் ஒரு சாட்சி பல்டி

/

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் மேலும் ஒரு சாட்சி பல்டி

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் மேலும் ஒரு சாட்சி பல்டி

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் மேலும் ஒரு சாட்சி பல்டி


ADDED : ஜூன் 11, 2024 08:34 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு அலுவலர் பிறழ் சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, விதிமீறி செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்த்து, விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் இதுவரை 32 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 25 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சதானந்தன், கோதகுமார், கோபிநாத், ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி ஆஜராகவில்லை.

அரசு தரப்பின் 33வது சாட்சியாக, முன்னாள் விக்கிரவாண்டி வி.ஏ.ஓ.,வும், தற்போதைய துணை பி.டி.ஓ.,வாக உள்ள இளையராஜா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, அரசுக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்தார்.

விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணையை, இன்றைக்கு (12ம் தேதி) ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us