ADDED : மே 07, 2024 05:36 AM

வானுார், : கண்டமங்கலம் ஒன்றிய அ.ம.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி, அமைப்பு செயலாளர் கணபதி முன்னிலையில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சுகுமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரங்கநாதன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கண்ணன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன்.
ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், அண்ணாதுரை, ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தாமோதரன், மாணவரணி செயலாளர் மயில் முருகன், வர்த்தக அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், ஹரிபாபு, மணி, மகேந்திரன், ராஜா, சந்தோஷ் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள்.
ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.