ADDED : மார் 04, 2025 09:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சசிகலா ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.