/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பென்ஷனர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
பென்ஷனர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக பென்ஷன் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.