/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெளியூரில் வேலை செய்பவர்கள் ஓட்டு போடுவதில் ஆர்வமில்லை
/
வெளியூரில் வேலை செய்பவர்கள் ஓட்டு போடுவதில் ஆர்வமில்லை
வெளியூரில் வேலை செய்பவர்கள் ஓட்டு போடுவதில் ஆர்வமில்லை
வெளியூரில் வேலை செய்பவர்கள் ஓட்டு போடுவதில் ஆர்வமில்லை
ADDED : ஏப் 20, 2024 06:09 AM
செஞ்சி, : வெளியூர்களில் வேலை செய்பவர்களில் ஏராளமானோர் இந்த முறை ஓட்டு போட வாரமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். அதேபோல் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும், வியாபாரிகளாகவும் பல்லாயிரக்கணக்கில் வெளியூர்களில் உள்ளனர்.
பல்வேறு ஊர்களில் உள்ள இவர்கள், பண்டிகை, ஊர் திருவிழா, குடும்ப விழா, தேர்தல் ஆகிய நாட்களில் சொந்த ஊருக்கு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வெளியூரில் உள்ளவர்களுக்கு அரசியல் கட்சியினர் வந்து செல்ல செலவுக்கு பணமும், ஓட்டுக்கு தனியாக பணமும் தருவது வழக்கம். இந்த முறை பல தொகுதிகளில் வெளியூரில் உள்ளவர்களின் ஓட்டுகளை பெறுவதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்ட வில்லை.
அவர்களுக்கு செலவுக்கான பணம் தருவதாக உத்தரவாதமும் தரவில்லை. இந்நிலையில் சில இடங்களில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் இந்த முறை ஓட்டுக்கு பணம் தரவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க.,வினரும், பா.ம.க.,வினரும் சில தொகுதிகளில் ஓட்டுக்காக டோக்கன் கொடுத்தனர். இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே வெளியூரில் உள்ள தங்களின் குடும்ப உறவுகளை ஓட்டு போட வரவேண்டாம் என தடுத்து விட்டனர்.
போதிய அளவு பஸ் வசதி இல்லாமல் கூட்ட நெரிசல் காரணமாகவும் பலரும் ஓட்டு போட வரவில்லை. மேலும், பெங்களூரு, ஹைதராபாத் உட்பட வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்கள் வந்து சென்றால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும் என்பதால் பெரும் பகுதியினர் இந்த முறை ஓட்டு போட வரவில்லை.
இதனால் வெளியூரில் உள்ளவர்களின் ஓட்டு பாதியளவு கூட இந்த தேர்தலில் பதிவாக வில்லை. கட்சியில் உள்ளவர்கள் வெளியூரில் இருந்தாலும் ஓட்டு போட வந்து விடுவார்கள் என நம்பிக்கையோடு இருந்த அரசியல் கட்சிகளுக்கு, சொந்த கட்சிக்கு ஓட்டு போட பலரும் வராமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

