sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனநலம் பாதித்த பிள்ளைகளுடன் தவிக்கும் ஏழைப்பெற்றோர்

/

மனநலம் பாதித்த பிள்ளைகளுடன் தவிக்கும் ஏழைப்பெற்றோர்

மனநலம் பாதித்த பிள்ளைகளுடன் தவிக்கும் ஏழைப்பெற்றோர்

மனநலம் பாதித்த பிள்ளைகளுடன் தவிக்கும் ஏழைப்பெற்றோர்


ADDED : ஜூன் 12, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளுடன் தவிக்கும் ஏழைப்பெற்றோர் இலவச வீட்டு மனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் தாலுகா அருங்குருக்கை எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன், 45; இவரது மனைவி கோவிந்தம்மாள், 40; இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட தங்களது 3 பிள்ளைகளுடன், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: அருங்குறிக்கை கிராமத்தில், கூலி வேலை செய்தபடி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். அரசு புறம்போக்கு இடத்தில், 2 சென்ட் அளவில் கூரை வீடு கட்டி வசித்து வருகிறோம். மூன்று பிள்ளைகளும் மனநலம் பாதிக்கப்பட்டதோடு, வலிப்பு நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பராமரிப்பதற்கு மிகுந்த வேதனையோடு இருக்கிறோம்.

இவர்களில் 2 குழந்தைகளுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வருகிறது. மற்றொரு குழந்தைக்கு மாத உதவி தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறோம். நீண்ட காலமாக நாங்கள் வசித்து வரும் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, அவர்களின் மனுவை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us