ADDED : மே 06, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் ஈஸ்வரன் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று, மயிலம் சுந்தர விநாயகர் கோவில், பெரும்பாக்கம், நெடி, கொல்லியங்குணம், செண்டூர், ஆலகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.