/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பத்திரப்பதிவு முதன்மை செயலர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்
/
பத்திரப்பதிவு முதன்மை செயலர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்
பத்திரப்பதிவு முதன்மை செயலர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்
பத்திரப்பதிவு முதன்மை செயலர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்
ADDED : ஆக 01, 2024 05:54 AM

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் பத்திரப்பதிவு முதன்மைச் செயலர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில், நேற்று முன்தினம்வரை 44 பேர் விசாரிக்கப்பட்டனர்.
நேற்றைய விசாரணையின்போது, ெயச்சந்திரன், கோதகுமார், சதானந்தன், கோபிநாதன் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சியான விழுப்புரம் முன்னாள் கலெக்டரான தற்போதைய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மைச் செயலர் பிரஜேந்திர நவ்நீத் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், வானுார் தாசில்தார், விழுப்புரம் ஆர்.டி.ஓ., கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கை மற்றும் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்து கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி ஜெயச்சந்திரன் பெயரிலும், அதே ஆண்டு அக்டோபர் 4ம் தேதி கவுதமசிகாமணி பெயரிலும் குவாரி உரிமத்திற்கு அனுமதி வழங்கியதாக சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரிடம், கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா வழக்கு விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.