/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
/
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
ADDED : ஆக 11, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைகேட்பு முகாம் விழுப்புரத்தில் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, தனி தாசில்தார் ரகுராமன் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன், தனி வருவாய் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர்.
நேற்று காலை 9:00 மணியிலிருந்து மதியம் 2:00 மணி வரை நடந்த முகாமில், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம், பெயர் சேர்த்தல், நகல் அட்டை, மொபைல் எண் இணைப்பு கோரி 9 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை, ஆய்வு செய்து, விரைவாக மனு மீதான கோரிக்கையை பூர்த்தி செய்வதாக தனிதாசில்தார், மனுதாரர்களிடம் தெரிவித்தார்.

