sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேரணியில் ரயில்வே மேம்பாலம் சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

/

பேரணியில் ரயில்வே மேம்பாலம் சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

பேரணியில் ரயில்வே மேம்பாலம் சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

பேரணியில் ரயில்வே மேம்பாலம் சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஜூலை 02, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் சட்டசபை தொகுதியில் உள்ள பேரணி கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்' என சிவக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்து பேசினார்.

சட்டசபையில் அவர் பேசுகையில், 'மயிலம் அடுத்த பேரணி கிராமத்தின் வழியாக பெரியதச்சூர், நேமூர், கெடார், வேட்டவலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும், சாலை வழியாக 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்ற முக்கியமான வழித்தடம் ஆகும்.

விபத்து காலங்களில் விழுப்புரம் செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புறவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையின் குறுக்கே தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்வே பாதை உள்ளது.

இதனால் இங்கு ரயில்வே கேட் போடுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.

இதற்கு பதில் அளித்த துறை அமைச்சர் வேலு, 'ரயில்வே துறையிலிருந்து தடையில்லா சான்று பெற்றவுடன் இதற்கான பணிகள் துவங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us