sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு வழங்கிய பட்டா இடத்தை அளவீடு செய்து தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

/

அரசு வழங்கிய பட்டா இடத்தை அளவீடு செய்து தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

அரசு வழங்கிய பட்டா இடத்தை அளவீடு செய்து தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

அரசு வழங்கிய பட்டா இடத்தை அளவீடு செய்து தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை


ADDED : செப் 02, 2024 10:47 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில், இலவச வீட்டுமனை வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்ட புதியஅலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், அளித்த மனு:

விழுப்புரம் அடுத்த வீரமடை, காணை பெரிச்சானுார், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த 23 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, அரகண்டநல்லுார் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன் வழங்கப்பட்டது.

தற்போது, அந்த இடத்தில் வீடுகட்டி குடியேறுவதற்கு முயன்றால், பட்டா வழங்கிய அந்த இடத்தில் இதுவரை அளவீடு செய்யாமல் உள்ளனர்.

தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., சர்வேயர் உள்ளிட்ட அலுவலர்களை நேரில் சந்தித்தும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து தருமாறு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், தற்போது தனி நபர் ஒருவர் அந்த இடத்தை அவருக்கு சொந்தம் என்று கூறிவருகிறார்.

எனவே, மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்காமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அங்கு வீடு கட்டுவதற்கு இடத்தினை அளவீடு செய்து தரவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us