sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

/

விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு


ADDED : ஜூன் 13, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வெங்கந்துார் சின்ன பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கேசவன் மகன் பாலகிருஷ்ணன், 57; விவசாயி. இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரத்தில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்து ரூ.1,25,000 பணத்தை எடுத்துக்கொண்டு, தனது பைக் பெட்டியில் வைத்துக்கொண்டு, விழுப்புரம் வழுதரெட்டி, காமன் கோவில் தெருவில் உள்ள நண்பர் மணி வீட்டிற்கு சென்றார்.

அங்கு, பைக் சைடு பெட்டியிலிருந்து ரூ.25,000 பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மணியிடம் கொடுத்து விட்டு வந்தார். மீண்டும் வந்து வண்டி பெட்டியை பார்த்தபோது, பெட்டியை உடைத்து மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us