/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை
ADDED : மார் 07, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் அடுத்த திருப்பச்சவாவடிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு மகன் மணிகண்டன்,40; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா,38. இவர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி, 2 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன், மணிகண்டனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜமுனா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.