ADDED : ஜூன் 08, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : அனந்தபுரத்தில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முரளி மரக்கன்று வழங்குவதை துவக்கி வைத்தார்.
ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங், முன்னாள் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் செயலாளர் அலில், நிர்வாகிகள் நடேசன், சம்பத், கிருபா, சீத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.