ADDED : ஏப் 30, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் சித்திரை மாத சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாரதனைக்குப்பின், மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.

