/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
/
மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
ADDED : மே 30, 2024 05:07 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு காலை சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது.
காலை 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.