/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரடைப்பு தடுப்பு குறித்த கருத்தரங்கம்
/
மாரடைப்பு தடுப்பு குறித்த கருத்தரங்கம்
ADDED : ஜூன் 26, 2024 07:22 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாரடைப்பு தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அருண் சுந்தர், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி துணை முதல்வர் சங்கீதா, பொது மருத்துவர் சுப்ரமணியன், இருதய பிரிவு தலைமை மருத்துவர்கள் ரபீக்பாபு, கதிர்வேல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாரடைப்பு வராமல் தடுப்பது குறித்தும், மாரடைப்பின் போது செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை மற்றும் செயல்கள் குறித்து பேசினர்.
மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.