/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜூன் மாதம் இறுதிக்குள் கரும்பை பதிவு செய்ய செங்கல்ராயன் சர்க்கரை ஆலை வேண்டுகோள்
/
ஜூன் மாதம் இறுதிக்குள் கரும்பை பதிவு செய்ய செங்கல்ராயன் சர்க்கரை ஆலை வேண்டுகோள்
ஜூன் மாதம் இறுதிக்குள் கரும்பை பதிவு செய்ய செங்கல்ராயன் சர்க்கரை ஆலை வேண்டுகோள்
ஜூன் மாதம் இறுதிக்குள் கரும்பை பதிவு செய்ய செங்கல்ராயன் சர்க்கரை ஆலை வேண்டுகோள்
ADDED : ஜூன் 12, 2024 11:58 PM
திருவெண்ணெய்நல்லுார், : ஜூன் மாதம் இறுதிக்குள் கரும்பை பதிவு செய்ய செங்கல்ராயன் சர்க்கரை ஆலை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் முத்துமீனாட்சி விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023--24ம் அரவைப் பருவத்தில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 443 டன் கரும்பு அரவை செய்ததோடு இதர கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 54 ஆயிரத்து 500 டன் பரிமாற்றம் செய்யப்பட்டு சராசரி சர்க்கரை கட்டுமானமாக 8.84 சதவீதம் பெறப்பட்டுள்ளது.
ஆலையின் அரவை சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் ஆலை நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு அறுவடை பணிக்கு 9 அறுவடை இயந்திரங்கள் ஈடுபடுத்தபட்டதால் வெட்டுக்கூலி வெகுவாக குறைக்கப்பட்டு கரும்பு விவசாயிகள் பலர் பயன் அடைந்துள்ளனர்.
எனவே கரும்பு நடவு செய்ய உள்ள விவசாயிகள் அனைவரும் 4.50 அடிக்கு குறையாமல் பார் அமைத்து நடவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கரும்பில் தற்போது “பொக்கா போங்” எனும் பூஞ்சை நோய் பரவலாக தென்படுகிறது இதனை கண்காணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இடைக்கணுப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளை தோகை உரித்து கட்டுப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வரும் 2024--25ம் அரவைப் பருவத்திற்கு போதிய கரும்பு இல்லாத நிலையில் சில விவசாயிகள் ஆலையில் பதிவு செய்யாமல் வைத்துள்ளனர்.
இதனை ஜூன் மாதம் இறுதிக்குள் பதிவு செய்து செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு கரும்பு சப்ளை செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.