sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொடர் வழிப்பறி: உ.பி.,யில் 3 பேர் சுற்றி வளைப்பு

/

தொடர் வழிப்பறி: உ.பி.,யில் 3 பேர் சுற்றி வளைப்பு

தொடர் வழிப்பறி: உ.பி.,யில் 3 பேர் சுற்றி வளைப்பு

தொடர் வழிப்பறி: உ.பி.,யில் 3 பேர் சுற்றி வளைப்பு


ADDED : மே 24, 2024 12:14 AM

Google News

ADDED : மே 24, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள், மூன்று பேரை, தீரன் அதிகாரம் 1 சினிமா பாணியில், போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் பகுதியில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வந்தன. எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவில், சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், பாண்டியன், ஏட்டுகள் மகாராஜா, சக்திவேல், அபிஸ், இளங்கோவன், இப்ராகிம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வழிப்பறியில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநில கொள்ளையர்கள் என்பது தெரிந்தது.

அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கடந்த 15ம் தேதி, உத்தர பிரதேசம் சென்றனர். அங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பதுங்கியிருந்த சதாப், 35, இர்பான், 42, ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் கூட்டாளியான டில்லியை சேர்ந்த அலாவுதீன் அலி, 27, ஆகியோரை கைது செய்தனர்.

மூவரையும் நேற்று விழுப்புரம் அழைத்து வந்தனர். அவர்கள் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிக்கியது எப்படி?

கொள்ளையர்கள் மூவரும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களில் இவர்களின் மொபைல் போன் உரையாடல்கள் ஒத்து போனதால், மூவரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.இவர்கள் மீது டில்லி, ஆந்திரா, உ.பி., மற்றும் தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன.இவர்களை கைது செய்ய உ.பி., மாநிலம் அம்ரோஹோ மாவட்டத்திற்கு சென்ற தனிப்படை போலீசாரை, தீரன் அதிகாரம் 1 சினிமா பட பாணியில், அப்பகுதி மக்கள் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர்.அதை தெடார்ந்து அந்த மாநில போலீசார் உதவியுடன் மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.








      Dinamalar
      Follow us