sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்கன்றுகளுக்கு தீ வைப்பு; போலீஸ் விசாரணை

/

மரக்கன்றுகளுக்கு தீ வைப்பு; போலீஸ் விசாரணை

மரக்கன்றுகளுக்கு தீ வைப்பு; போலீஸ் விசாரணை

மரக்கன்றுகளுக்கு தீ வைப்பு; போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 10, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த திருக்குணம், கொசப்பாளையத்தில் ஊராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் மரக்கன்றுகளுக்கு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி, கஞ்சனுார் அடுத்த திருக்குணம் ஊராட்சியைச் சேர்ந்த கொசப்பாளையம் கிராமத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அரசு இடமான 27 ஏக்கரில் மா, பலா, பூவரசு, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 12,500 மரக்கன்றுகளை ஊராட்சி தலைவர் பிரகாஷ் நட்டு பராமரித்து வருகிறார்.

நேற்று மதியம் 1:00 மணியளவில் இங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், 2 ஏக்கர் அளவிற்கு தீ மளமளவென பரவியது.

தகவலறிந்த அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில், 700க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து கருகியது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us